Maranthupo en maname12
மறந்துபோ என் மனமே(1) – 2
வெளியே வந்த ராம் அவள் அமர்ந்திருப்பதை பார்க்க, பெட் மேல் இருந்த போன் அடித்தது.
அவள் எழுந்தாள், அவன் அவளை அமரும்படி கை அசைத்துவிட்டு, கால் அட்டென்ட் செய்ய, அவள் அவனை பார்த்தாள். அவன் பால்க்கனிக்கு சென்று பேச ஆரம்பித்தான்.
——–
“அம்மா போட்டோ பார்க்க சொன்னப்ப, அப்போ இருந்த மனநிலைல பார்க்க பிடிக்கல. நிச்சயதார்த்தத்துக்கு கூட வரல”
“நேற்று தான் USல் இருந்து வந்ததா அம்மா சொன்னாள். இப்போ தான் நேர்ல பாக்கறேன்”
“நான் ஒரு ரிசெர்வ்ட் டைப். அப்பா போனதுக்கப்பறம் என்னால ரொம்ப சகஜமா யார்ட்டயும் பேச முடில. அதுவும் பசங்கனா இன்னும் பயம்”
“எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி நல்லா பழகி கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை. லவ் பண்ணற அளவுக்கு தைரியம் இல்ல. அப்படி பண்ணா அம்மா என்ன பண்ணுவா நம்ம இல்லாமனு தோணும்”
“அப்பா இல்லாததால அம்மாவ பக்கத்துலயே வெச்சுக்கணும். கொஞ்ச நாள் ஒர்க் பண்ணி கொஞ்சம் பணம் சேர்க்கணும். எனக்கு பிடித்த பரதம் ஆடணும், சொல்லி தரணும்னு ஆச”
“ஆனா எல்லாம் ஆசையும் நிராசை ஆனது போல ராமிடம் ஒரு தடவை கூட பேசல கல்யாணத்துக்கு முன்னாடி. இது போதாதுன்னு கல்யாணத்துக்கு அப்பறம் ரெண்டு வாரத்துல US போகணும் அதுவும் டிபென்டண்ட் விசால(dependent visa)”
“ப்ராச்சி வேற டிபென்டண்ட்ல போன வேலைலாம் பாக்க முடியாதுனு சொன்னா”
“அம்மாவ விட்டுட்டு அவளோ தூரம் சரியா பழகாத ஒருத்தர் கூட. எதுக்காக இந்த கல்யாணத்த இவளோ அவசரமா ஒரு மாசத்துல முடிக்கணும்”
“எல்லாம் அந்த அத்தை செய்த வேலை. அவங்க அக்கா மகன்னு அம்மாவ கன்வின்ஸ் பண்ணிட்டாங்க. எல்லாம் என் தலையெழுத்து”
“இன்னக்கி நைட் எப்படி போகுமோ. எப்படி பேசணும்னு கூட தெரில” என்று அவள் முணுமுணுத்துக்கொண்டிருக்க ராம் போன் பேசி முடித்துவிட்டு உள்ளே வந்தான். ராம் அவளிடம் நெருங்கும்போது எதோ ஒரு பயம் பதட்டம் என்ன நடக்குமோ என்று.
“ஹே. நீ தூங்கலையா. ஐம் சாரி டு மேக் யு வெயிட். உனக்கும் என்னைப்போல களைப்பா இருக்கும்னு நினைக்கறேன். நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. எனக்கு வேல இருக்கு. முடிச்சுட்டு நான் படுத்துகிறேன்” என்றான்.
“இப்ப கூட என்கிட்ட பேசணும்னு தோணல அவருக்கு” என்று அதிர்ந்தாள்.
“இல்ல இந்த பால கொடுக்க சொன்னாங்க உங்களுக்கு. தரவா?” என்று பேச்சை ஆரம்பித்தாள்.
“நோ ஃபோர்மாலிடிஸ். எனக்கு முக்கியமான வேல இருக்கு. உனக்கு வேணும்னா நீ எடுத்துக்கோ, எனக்கு இப்போ எதும் வேணாம்” என்று சொல்லிட்டு சோபாவில் அமர்ந்தவன் லேப்டாப் எடுத்து அதில் மூழ்கினான்.
என்னசெய்வதென்று தெரியாமல் அவள் பெட்டின் ஒரு மூலையில் படுத்துகொண்டாள்.
——–
ராம் சோபாவில் உக்கார்ந்தபடியே யோசனையில் மூழ்கினான்.
“என்ன மன்னிச்சுடு நந்தினி. என் விருப்பமில்லாம என் வாழ்க்கையில நடந்த முதல் விஷயம் இந்த கல்யாணம்”
“ஆரம்பத்துல நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன் இதை நிறுத்த. பட் அம்மா கேக்கவே இல்ல. தங்கச்சி இருக்கா. அவ வாழ்க்கையை ஸ்பாயில் பண்ணிடாத. அவளுக்கு ஒரு நல்ல லைப் வேணாமானு செண்டிமெண்ட்டா பேசியே என் வாய அடைச்சுட்டாங்க”
“இட் வாஸ் ஆல் ஓவர் இன் தி பிலின்க் ஆஃப் அன் ஐ (It was all over in the blink of an eye)”
“என்னால Sue வ எப்படி மறக்க முடியும்?!?!”

Super start🥰
Thank you da 🤩
Ennadaaa unakku already love irukkaaa😲😲😲😲
Hahaha aama ka 😆😆