Ennodu Nee Unnodu naan – 2

என்னோடு நீ உன்னோடு நான் – 2:

கடந்தகால நினைவுகளில் சூழ்ந்திருந்தவளை, லேப்டாபின் ஸ்கைப் கால் நிகழ்விற்கு கொண்டுவந்தது.

அவள் அலுவலகத்திலிருந்து மேனேஜர் அழைத்திருந்தார்.

“ஹலோ ஷிவ்” நிலா ஆரம்பிக்க,

“ஹே நிலா. உன் மொபைல்’ல ரீச் பண்ண ட்ரை பண்ணேன். ஆனா ஆஃப் ஆகியிருக்கு, என்ன ஆச்சு?”

மொபைல் சுவிட்ச் ஆப் செய்தது நினைவிற்கு வந்து தலையில் அடித்துக்கொண்டு, “ஓ சாரி ஷிவ். பேட்டரி முடிஞ்சது, சார்ஜ் போட்டிருக்கேன். ஏதாவது முக்கியமான விஷயமா?”

“ஐ ஹேவ் எ குட் நியூஸ். கூர்க் ஊட்டி ட்ரிப்’க்கு ஒரு வாரம் நம்ம டீம்’ம அனுப்ப மேனேஜ்மென்ட் அப்ரூவ் பண்ணிருக்கு. பட் ரொம்ப ஷார்ட் நோட்டீஸ் நிலா. பிகாஸ், நெக்ஸ்ட் வீக் முக்கியமான வேலை இருக்கு. அதுக்குள்ள திரும்பி வந்தாகணும்”

“ஓ வாவ்! சூப்பர் ஷிவ். என்ஜாய் பண்றோம். டீம் டிசெர்வ்ஸ் இட்”

“எஸ், உங்களோட குயிக் ட்ர்ன்அரௌண்ட் (quick turnaround – விரைவாக முடித்தது) தான் காரணம். உங்க டீம் வர்க் சூப்பர் நிலா. அதுனாலதான் கஸ்டமர்ஸ்’ட்ட இருந்து ரீகால் (recall) பண்ண கார்ஸ்… சீக்கிரம் ரெடி பண்ணி திருப்பி அனுப்ப முடிஞ்சது”

“நீங்க டீம்’க்கு அப்ரிஷியேட் பண்ணி மெயில் பண்றீங்களா ஷிவ்? அவங்க சந்தோஷப்படுவாங்க”

“கண்டிப்பா. ட்ரிப் பத்தியும் அனுப்பிடறேன். அப்புறம்… மொபைல் ஸ்விச் ஆன் பண்ண மறந்திடாத. உன் பாய் ஃபிரண்ட் கோவிச்சிக்க போறாரு” பலத்த சிரிப்புடன் சொன்னவரிடம்,

“கண்டிப்பா ஷிவ்” என்றாள் முகத்தைச் சுளித்தபடி.

‘அவன் போன் பண்ணதால தானே ஸ்விச் ஆஃப் பண்ணேன்’ என்று நினைத்துக்கொண்டு, அதை ஆன் செய்தவுடன்… ‘எட்டு மிஸ்ட் கால்ஸ் அவனிடம் இருந்து’ என்று காட்டியது. அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

நம்பர் பிளாக் செய்யலாம் என்று பல முறை நினைத்தவள், அவன் வேறு புது புது எண்ணிலிருந்து அழைக்க நேரிடும்… அது இன்னமும் தொல்லை என்று அந்த எண்ணத்தைத் தவிர்த்தாள். 

சில மணிநேரம் கழித்து… அவள் அம்மாவும் அப்பாவும் வேலை முடித்துத் திரும்பியிருந்தார்கள்.

அவர்களுக்குக் கதவைத் திறந்துவிட்டு உள்ளே செல்ல நினைக்க, அவள் தந்தை… “கொஞ்சம் அவளை இருக்க சொல்லு” மனைவியைப் பார்த்து சொன்னவுடன், நிலா நடையை நிறுத்திவிட்டு நின்றாள்… அவர் முகம் பாராமல்.

“இதுக்கு முன்னாடி பார்த்த இடத்துல திரும்பவும் அவங்க இறங்கி வந்து பொண்ணு கேட்டிருக்காங்க. எனக்கென்னமோ இது தான் பொருத்தமான இடமோனு தோணுது. வேலைக்கு போகவேண்டாம்னு  அவங்க சொன்னா, சரினு சொல்ல சொல்லு” என்றவர்…

“நக்ஷத்ராவிற்கும் இருபத்தியஞ்சி வயசாயிடுச்சு. உன் பொண்ணு இந்த சம்மந்தத்துக்கு ஒத்துக்கலைனா, நக்ஷத்ராவிற்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டியதுதான்” அவர் கோபமாக சொன்னவுடன், நிலாவும் கோபமாக தன் அறைக்குள் சென்றாள்.

“என்னங்க இப்படி பேசறீங்க? அக்கா இருக்கப்ப தங்கச்சிக்கு எப்படி கல்யாணம் பண்ண முடியும்?” என்று நிலாவின் அம்மா கேட்க… “இப்படி பேசினாவாவது அவ கல்யாணத்த பண்ணிப்பான்னு தான் சொன்னேன். எனக்கு ரெண்டு பேரும் ஒன்னு தான். இவளால அவளும் காத்துட்டிருக்க வேண்டியதாயிருக்கு” என்றார் இறுக்கத்துடன்.

அவள் அம்மா, யாருக்குப் பேசுவது என்று தெரியாமல் எப்பொழுதும் இதுபோல திண்டாடுவதே வழக்கம்.

“எனக்கு இந்த கல்யாணத்துலயெல்லாம் விருப்பமே போச்சு. அவளுக்கு பண்ணணும்னா பண்ணுங்க மா”  என்றாள் நிலா அறைக்குள் வந்த தன் அம்மாவிடம்.

“ஏன்டி இப்படி பேசி நீயும் என்னை கஷ்டப்படுத்தற? உங்கப்பா ஒரு பக்கம் மூஞ்சிய தூக்கி வச்சுக்கறாரு… நீ ஒரு பக்கம் இப்படி பேசற” என்று குறைபட்டுக்கொண்ட அம்மாவிடம்…

“இங்க பாருமா… எது நடக்கணுமோ அது அந்தந்த நேரத்துல சரியா நடக்கும். ஒருவேளை அவளுக்கு அப்புறம் தான் எனக்கு கல்யாணம்னா அப்படியே நடக்கட்டும்” என்று நிறுத்திய நிலா,

“அப்புறம் நான் முன்னாடியே உங்ககிட்ட சொன்னேன்ல, எங்க ஆஃபீஸ்ல டூர் பிளான் பண்றாங்கனு. ஊட்டி, கூர்க்… நாளைக்கு கிளம்ப டிசைட் பண்ணிருக்காங்க. என்னையும் வர சொல்லிருக்காங்க. ஒரு வாரத்துல வந்துடுவேன். நாளைக்கு கிளம்பறேன். அப்பாட்ட நான் பேசல. நீயே சொல்லிடு” படபடவென பொறிந்த மகளிடம்…

“நாளைக்கே வா. ஹ்ம்ம்… அப்பா அந்த சம்மந்தம் பத்தி கேட்டார்னா?” அவள் அம்மா இழுத்தார்.

“நான் வந்து முடிவை சொல்றேனே மா… ப்ளீஸ்” என்றாள் நிலா அப்போது அதிலிருந்து தப்பிக்க.

அவள் அம்மா வெளியே சென்றவுடன் ஷிவ்’க்கு கால் செய்தாள்.

“ஹாய் ஷிவ்” என்று ஆரம்பித்தவள், “நம்ம டூர் போறோம்ல” என்று சிறிது நேரம் அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தாள்.

நிலாவின் அப்பாவும், ‘நிலா ஊருக்குப் போய்விட்டு வந்து முடிவு சொல்வாள்’ என்று எண்ணி அவளை அனுப்ப மறுப்பு எதுவும் சொல்லவில்லை.

அடுத்த நாள்!

நைட் ஷிபிட் முடிந்து காலையில் வீடு வந்தாள் நிலாவின் தங்கை நக்ஷத்திரா.

“இங்க பாரு நிலா. அங்க போனப்புறம் கால் பண்ணு. ஒழுங்கா சாப்பிடு. நல்லா சந்தோஷமா இருந்துட்டு வா. ராவும் பகலுமா வேல பார்த்திருக்க. நிம்மதியா என்ஜாய் பண்ணிட்டு வா” அவள் அம்மா அவளுக்கு அறிவுரை கூற…

“ஹ்ம்ம் சரி மா. அப்புறம் அது ஏதோ ஹில் ஸ்டேஷன் ரிசார்ட். மொபைல் சிக்னல்’லாம் எப்படி இருக்கும்னு தெரியல. போன் பண்ணலைன்னா பதறாத. நாங்க டீமா தான் போறோம். சோ கவலைப்படாத” என்றாள் அவள் அம்மாவிடம்.

“எல்லாம் எடுத்து வச்சுட்டியா. எதுவும் மறக்கலயே” அவள் அம்மா அவளுடைய பைகளை பார்த்து கேட்க, ” எஸ் மா எல்லாம் எடுத்துட்டேன். அப்பா வந்தா சொல்லிடு” என்றவள் தங்கையிடம்… “திரா பார்த்துக்கோடி. நான் வந்துடறேன் ஒரு வாரத்துல” என்றாள்.

“சரி நிலா. பார்த்து போய்ட்டு வா. ஆமா எப்படி போறீங்க?”

“இங்கேயிருந்து மைசூர்க்கு ஃபிளைட்ல போறோம். அங்கேயிருந்து கூர்குக்கு ரோட் ட்ரிப். நான் லோக்கல் ட்ரெயின் பிடிச்சு ஏர்போர்ட் போய்டறேன். சரி வரேன் மா. பை திரா” என்று அம்மாவிடம் தங்கையிடமும் விடைபெற்றுக்கொண்டாள்.

ஒருவழியாக அப்பாவின் பேச்சிலிருந்து தப்பித்தது போல் இருந்தது அவளுக்கு. ஷிவ்வுக்கு போன் செய்து அப்டேட் செய்தாள்.

பல எண்ணங்களுடன் அந்த பயணத்தை ஆரம்பித்தாள்.

சில மணி நேரத்தில் சென்றடைந்தவுடன், ஹோட்டலில் செக் இன் செய்த கையோடு  அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.

“அம்மா நான் வந்துட்டேன். வந்தது களைப்பா இருக்கு. நான் அப்புறமா கூப்பிடறேன்” என்று தகவலை சொல்லிவிட்டு போனை வைத்தாள்!

——

“டேய் கௌஷிக்! ஃப்ரியா?” என்று போனில் ஆதி கௌஷிக்கை அழைத்துப் பேச…  “சொல்லுடா” என்றான் கௌஷிக்.

“நான் ஒரு ட்ரிப் போலாம்னு இருக்கேன் கௌஷிக். ஒரு சின்ன பிரேக். எமர்ஜன்சி கேஸ் ஏதாச்சும்னா டாக்டர் தீரன் கிட்ட உதவி கேளுங்க. அவர் ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்கார்”

“ஹ்ம்ம்… பைரவி வரானு நீ கிளம்பறயா ஆதி?”

“அதுவும் ஒரு காரணம். ஆனா எனக்கு வேலைல இருந்து ஒரு சின்ன சேஞ்ச் கிடைச்சா நல்லா இருக்கும்னு இருக்கு கௌஷிக். தொடர்ந்து வேல பார்க்கற மாதிரி தோணுது அதான்”

“சரி எங்க போக பிளான் பண்ணிருக்க?”

“நம்ம ட்ராவல் என்சைக்ளோபீடியா கிட்ட பேசணும். அவன் போன மாசம் ட்ரிப் போனேன்னு சொன்னான்” ஆதி சொல்ல… “சரி எப்போ கிளம்பற?” கேட்டான் கௌஷிக்.

“நாளைக்கு காலைல. நீ இன்னைக்கு நைட் வரமாட்டல்ல… அதான் உன்கிட்ட சொல்லிடலாம்னு கால் பண்ணேன்” என்றான்.

அதற்கு கௌஷிக், “ஆமாடா… முக்கியமான கேஸ் இருக்கு. சரி, நீ எதையும் யோசிக்காம நிம்மதியா போயிட்டு வா” இருவரும் பேசிமுடித்து போனை வைத்தனர்.

கௌஷிக், ஜீவன் மற்றும் ப்ரித்வி… மூவரும் ஆதியின் நண்பர்கள். ப்ரித்வி காவல்துறையில் வேலைபார்ப்பவன். ஜீவன் பல இடங்களுக்குப் பயணம் செய்பவன். அவனை ட்ராவல் என்சைக்ளோபீடியா (travel encyclopedia) என்றே ஆதி அழைப்பான்.

கௌஷிக்கிடம் பேசியவுடன், ஆதி ஜீவனை அழைத்தான். ஜீவனிடம் எங்கு செல்லலாம் என்பதை தெரிந்துகொண்ட பின், தன் அம்மாவிடம் ஊருக்குப் போவதை மெசேஜ் மட்டும் செய்தான்.

அடுத்த நாள்!

எப்பொழுதும் ஷார்ட் ட்ரிப் செல்வதற்கு எடுத்துக்கொள்ளும் எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டான்.

அவனுடைய ரக் சேக்’கில் (rucksack) அனைத்தையும், அதன் இடங்களில் பேக் செய்து ஒருவழியாகத் தேவைப்பட்ட அனைத்தையும் எடுத்துக்கொண்டு புறப்படத் தயாரானான்.

அவன் அம்மாவிற்கு போன் செய்து கிளம்புவதைத் தெரியப்படுத்திய பின், அவனுக்குத் தற்சமயம் மிகவும் தேவைப்படும் அந்த பயணத்தைத் தொடங்கினான் அவனுடைய ரேஞ் ரோவெரில்!

சில மைல் தூர பயணத்துக்குப் பின் அவன் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு வந்தடைந்தான். ஃபிரெஷ் ஆனபின், சாப்பிடச் செல்வதற்கு தயாரான ஆதி, ‘உள்ளூர் உணவை சுவைத்துப்பார்க்கலாம்’ என்று எண்ணி, மொபைலை பார்த்தபடி, அவன் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து புறப்பட்டான்.

சிறிது தூரம் சென்ற பின்… ஒரு சிக்னல்’லில் அவன் காரை நிறுத்த, கார் ஜன்னலை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஒரு பத்து முதல் பதிமூன்று வயது வரை இருக்கும் இரு சிறுமிகள்.

“அண்ணா ச்சால ஆகிளி. கொஞ்சம் ரூபா ஈவண்டி” என்று கேட்டனர். அவனுக்கு அவர்கள் பணம் கேட்கிறார்கள் என்று புரிந்தது ஆனால் என்ன சொன்னார்கள் என்று புரியவில்லை.

அவன் என்ன என்பதுபோல் சைகையில் கேட்க… அவர்கள் இருவரும் வயிற்றில் கையை தேய்த்தார்கள் பசி என்பதுபோல்.

அவர்களைப் பார்க்க பாவமாகத் தோன்றியதால், பணத்தை எடுத்துக் கொடுத்தான். கொடுத்ததை அவர்கள் வாங்கிக்கொண்டு வராத புன்னகையை வரவழைத்து… புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு சென்றனர்.

அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான் ஆதி. சிறுமியர் இருவரும் ரோட்டோரம் சென்று அவர்களைப்போல் இன்னும் சில சிறுமிகளுடன் சேர்ந்துகொண்டனர்.

சிக்னல் திறக்கப்பட்டது கூட தெரியாமல் அவர்களையே பார்த்தபடி இருந்த ஆதியை… பின்னே இருந்த வண்டிகள் தந்த ஹார்ன் சத்தம் நிகழ்வுக்குக் கொண்டுவந்தது. வண்டியைக் கிளப்பினான்.

சிறிது தூரம் சென்றவனுக்கு அந்தக் காட்சி நெருடலாகவே இருந்தது.

‘சின்னஞ்சிறு சிறுமிகள். இந்த ஊர் போல தெரியவில்லை. வேறெங்கிருந்தோ வந்திருக்கிறார்கள். ஏன் பிச்சை எடுக்க வேண்டும்?’ என்று அவனுக்கு மனதில்பட்ட அடுத்த  நொடி, அடுத்த சிக்னலில் யூ டர்ன் எடுத்து காரை திருப்பினான்.

மறு பக்க ரோட்டிலிருந்து அந்தப்பக்கமிருந்த சிறுமிகளை பார்த்தவன், அங்கு நடப்பதைப் பார்த்து சற்று பதற்றமடைந்தான்.

அந்த சிறுமிகளை யாரோ சுமோ காரில் ஏற்றிக்கொண்டு, அந்த இடத்திலிருந்து புறப்பட இருந்தனர்.

ஆதி கண்களை ஆராய விட, அந்த சுமோ’வின் ஜன்னலினுள் ஒரு நடுத்தர வயது பெண்மணி இருக்கையில் உட்கார்ந்திருக்க, முன்னே டிரைவர் ஒரு சிவப்பு நிற சட்டை அணிந்திருந்தான்.

ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த ஆதி, அவன் காரை சீக்கிரம் திருப்பிக்கொண்டு அவர்களை பின் தொடர்ந்தான்.

அவனால் காப்பற்ற முடியுமா?!

கடந்தகால நினைவுகளில் சூழ்ந்திருந்தவளை, லேப்டாபின் ஸ்கைப் கால் நிகழ்விற்கு கொண்டுவந்தது.

அவள் அலுவலகத்திலிருந்து மேனேஜர் அழைத்திருந்தார்.

“ஹலோ ஷிவ்” நிலா ஆரம்பிக்க,

“ஹே நிலா. உன் மொபைல்’ல ரீச் பண்ண ட்ரை பண்ணேன். ஆனா ஆஃப் ஆகியிருக்கு, என்ன ஆச்சு?”

மொபைல் சுவிட்ச் ஆப் செய்தது நினைவிற்கு வந்து தலையில் அடித்துக்கொண்டு, “ஓ சாரி ஷிவ். பேட்டரி முடிஞ்சது, சார்ஜ் போட்டிருக்கேன். ஏதாவது முக்கியமான விஷயமா?”

“ஐ ஹேவ் எ குட் நியூஸ். கூர்க் ஊட்டி ட்ரிப்’க்கு ஒரு வாரம் நம்ம டீம்’ம அனுப்ப மேனேஜ்மென்ட் அப்ரூவ் பண்ணிருக்கு. பட் ரொம்ப ஷார்ட் நோட்டீஸ் நிலா. பிகாஸ், நெக்ஸ்ட் வீக் முக்கியமான வேலை இருக்கு. அதுக்குள்ள திரும்பி வந்தாகணும்”

“ஓ வாவ்! சூப்பர் ஷிவ். என்ஜாய் பண்றோம். டீம் டிசெர்வ்ஸ் இட்”

“எஸ், உங்களோட குயிக் ட்ர்ன்அரௌண்ட் (quick turnaround – விரைவாக முடித்தது) தான் காரணம். உங்க டீம் வர்க் சூப்பர் நிலா. அதுனாலதான் கஸ்டமர்ஸ்’ட்ட இருந்து ரீகால் (recall) பண்ண கார்ஸ்… சீக்கிரம் ரெடி பண்ணி திருப்பி அனுப்ப முடிஞ்சது”

“நீங்க டீம்’க்கு அப்ரிஷியேட் பண்ணி மெயில் பண்றீங்களா ஷிவ்? அவங்க சந்தோஷப்படுவாங்க”

“கண்டிப்பா. ட்ரிப் பத்தியும் அனுப்பிடறேன். அப்புறம்… மொபைல் ஸ்விச் ஆன் பண்ண மறந்திடாத. உன் பாய் ஃபிரண்ட் கோவிச்சிக்க போறாரு” பலத்த சிரிப்புடன் சொன்னவரிடம்,

“கண்டிப்பா ஷிவ்” என்றாள் முகத்தைச் சுளித்தபடி.

‘அவன் போன் பண்ணதால தானே ஸ்விச் ஆஃப் பண்ணேன்’ என்று நினைத்துக்கொண்டு, அதை ஆன் செய்தவுடன்… ‘எட்டு மிஸ்ட் கால்ஸ் அவனிடம் இருந்து’ என்று காட்டியது. அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

நம்பர் பிளாக் செய்யலாம் என்று பல முறை நினைத்தவள், அவன் வேறு புது புது எண்ணிலிருந்து அழைக்க நேரிடும்… அது இன்னமும் தொல்லை என்று அந்த எண்ணத்தைத் தவிர்த்தாள். 

சில மணிநேரம் கழித்து… அவள் அம்மாவும் அப்பாவும் வேலை முடித்துத் திரும்பியிருந்தார்கள்.

அவர்களுக்குக் கதவைத் திறந்துவிட்டு உள்ளே செல்ல நினைக்க, அவள் தந்தை… “கொஞ்சம் அவளை இருக்க சொல்லு” மனைவியைப் பார்த்து சொன்னவுடன், நிலா நடையை நிறுத்திவிட்டு நின்றாள்… அவர் முகம் பாராமல்.

“இதுக்கு முன்னாடி பார்த்த இடத்துல திரும்பவும் அவங்க இறங்கி வந்து பொண்ணு கேட்டிருக்காங்க. எனக்கென்னமோ இது தான் பொருத்தமான இடமோனு தோணுது. வேலைக்கு போகவேண்டாம்னு  அவங்க சொன்னா, சரினு சொல்ல சொல்லு” என்றவர்…

“நக்ஷத்ராவிற்கும் இருபத்தியஞ்சி வயசாயிடுச்சு. உன் பொண்ணு இந்த சம்மந்தத்துக்கு ஒத்துக்கலைனா, நக்ஷத்ராவிற்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டியதுதான்” அவர் கோபமாக சொன்னவுடன், நிலாவும் கோபமாக தன் அறைக்குள் சென்றாள்.

“என்னங்க இப்படி பேசறீங்க? அக்கா இருக்கப்ப தங்கச்சிக்கு எப்படி கல்யாணம் பண்ண முடியும்?” என்று நிலாவின் அம்மா கேட்க… “இப்படி பேசினாவாவது அவ கல்யாணத்த பண்ணிப்பான்னு தான் சொன்னேன். எனக்கு ரெண்டு பேரும் ஒன்னு தான். இவளால அவளும் காத்துட்டிருக்க வேண்டியதாயிருக்கு” என்றார் இறுக்கத்துடன்.

அவள் அம்மா, யாருக்குப் பேசுவது என்று தெரியாமல் எப்பொழுதும் இதுபோல திண்டாடுவதே வழக்கம்.

“எனக்கு இந்த கல்யாணத்துலயெல்லாம் விருப்பமே போச்சு. அவளுக்கு பண்ணணும்னா பண்ணுங்க மா”  என்றாள் நிலா அறைக்குள் வந்த தன் அம்மாவிடம்.

“ஏன்டி இப்படி பேசி நீயும் என்னை கஷ்டப்படுத்தற? உங்கப்பா ஒரு பக்கம் மூஞ்சிய தூக்கி வச்சுக்கறாரு… நீ ஒரு பக்கம் இப்படி பேசற” என்று குறைபட்டுக்கொண்ட அம்மாவிடம்…

“இங்க பாருமா… எது நடக்கணுமோ அது அந்தந்த நேரத்துல சரியா நடக்கும். ஒருவேளை அவளுக்கு அப்புறம் தான் எனக்கு கல்யாணம்னா அப்படியே நடக்கட்டும்” என்று நிறுத்திய நிலா,

“அப்புறம் நான் முன்னாடியே உங்ககிட்ட சொன்னேன்ல, எங்க ஆஃபீஸ்ல டூர் பிளான் பண்றாங்கனு. ஊட்டி, கூர்க்… நாளைக்கு கிளம்ப டிசைட் பண்ணிருக்காங்க. என்னையும் வர சொல்லிருக்காங்க. ஒரு வாரத்துல வந்துடுவேன். நாளைக்கு கிளம்பறேன். அப்பாட்ட நான் பேசல. நீயே சொல்லிடு” படபடவென பொறிந்த மகளிடம்…

“நாளைக்கே வா. ஹ்ம்ம்… அப்பா அந்த சம்மந்தம் பத்தி கேட்டார்னா?” அவள் அம்மா இழுத்தார்.

“நான் வந்து முடிவை சொல்றேனே மா… ப்ளீஸ்” என்றாள் நிலா அப்போது அதிலிருந்து தப்பிக்க.

அவள் அம்மா வெளியே சென்றவுடன் ஷிவ்’க்கு கால் செய்தாள்.

“ஹாய் ஷிவ்” என்று ஆரம்பித்தவள், “நம்ம டூர் போறோம்ல” என்று சிறிது நேரம் அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தாள்.

நிலாவின் அப்பாவும், ‘நிலா ஊருக்குப் போய்விட்டு வந்து முடிவு சொல்வாள்’ என்று எண்ணி அவளை அனுப்ப மறுப்பு எதுவும் சொல்லவில்லை.

அடுத்த நாள்!

நைட் ஷிபிட் முடிந்து காலையில் வீடு வந்தாள் நிலாவின் தங்கை நக்ஷத்திரா.

“இங்க பாரு நிலா. அங்க போனப்புறம் கால் பண்ணு. ஒழுங்கா சாப்பிடு. நல்லா சந்தோஷமா இருந்துட்டு வா. ராவும் பகலுமா வேல பார்த்திருக்க. நிம்மதியா என்ஜாய் பண்ணிட்டு வா” அவள் அம்மா அவளுக்கு அறிவுரை கூற…

“ஹ்ம்ம் சரி மா. அப்புறம் அது ஏதோ ஹில் ஸ்டேஷன் ரிசார்ட். மொபைல் சிக்னல்’லாம் எப்படி இருக்கும்னு தெரியல. போன் பண்ணலைன்னா பதறாத. நாங்க டீமா தான் போறோம். சோ கவலைப்படாத” என்றாள் அவள் அம்மாவிடம்.

“எல்லாம் எடுத்து வச்சுட்டியா. எதுவும் மறக்கலயே” அவள் அம்மா அவளுடைய பைகளை பார்த்து கேட்க, ” எஸ் மா எல்லாம் எடுத்துட்டேன். அப்பா வந்தா சொல்லிடு” என்றவள் தங்கையிடம்… “திரா பார்த்துக்கோடி. நான் வந்துடறேன் ஒரு வாரத்துல” என்றாள்.

“சரி நிலா. பார்த்து போய்ட்டு வா. ஆமா எப்படி போறீங்க?”

“இங்கேயிருந்து மைசூர்க்கு ஃபிளைட்ல போறோம். அங்கேயிருந்து கூர்குக்கு ரோட் ட்ரிப். நான் லோக்கல் ட்ரெயின் பிடிச்சு ஏர்போர்ட் போய்டறேன். சரி வரேன் மா. பை திரா” என்று அம்மாவிடம் தங்கையிடமும் விடைபெற்றுக்கொண்டாள்.

ஒருவழியாக அப்பாவின் பேச்சிலிருந்து தப்பித்தது போல் இருந்தது அவளுக்கு. ஷிவ்வுக்கு போன் செய்து அப்டேட் செய்தாள்.

பல எண்ணங்களுடன் அந்த பயணத்தை ஆரம்பித்தாள்.

சில மணி நேரத்தில் சென்றடைந்தவுடன், ஹோட்டலில் செக் இன் செய்த கையோடு  அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.

“அம்மா நான் வந்துட்டேன். வந்தது களைப்பா இருக்கு. நான் அப்புறமா கூப்பிடறேன்” என்று தகவலை சொல்லிவிட்டு போனை வைத்தாள்!

——

“டேய் கௌஷிக்! ஃப்ரியா?” என்று போனில் ஆதி கௌஷிக்கை அழைத்துப் பேச…  “சொல்லுடா” என்றான் கௌஷிக்.

“நான் ஒரு ட்ரிப் போலாம்னு இருக்கேன் கௌஷிக். ஒரு சின்ன பிரேக். எமர்ஜன்சி கேஸ் ஏதாச்சும்னா டாக்டர் தீரன் கிட்ட உதவி கேளுங்க. அவர் ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்கார்”

“ஹ்ம்ம்… பைரவி வரானு நீ கிளம்பறயா ஆதி?”

“அதுவும் ஒரு காரணம். ஆனா எனக்கு வேலைல இருந்து ஒரு சின்ன சேஞ்ச் கிடைச்சா நல்லா இருக்கும்னு இருக்கு கௌஷிக். தொடர்ந்து வேல பார்க்கற மாதிரி தோணுது அதான்”

“சரி எங்க போக பிளான் பண்ணிருக்க?”

“நம்ம ட்ராவல் என்சைக்ளோபீடியா கிட்ட பேசணும். அவன் போன மாசம் ட்ரிப் போனேன்னு சொன்னான்” ஆதி சொல்ல… “சரி எப்போ கிளம்பற?” கேட்டான் கௌஷிக்.

“நாளைக்கு காலைல. நீ இன்னைக்கு நைட் வரமாட்டல்ல… அதான் உன்கிட்ட சொல்லிடலாம்னு கால் பண்ணேன்” என்றான்.

அதற்கு கௌஷிக், “ஆமாடா… முக்கியமான கேஸ் இருக்கு. சரி, நீ எதையும் யோசிக்காம நிம்மதியா போயிட்டு வா” இருவரும் பேசிமுடித்து போனை வைத்தனர்.

கௌஷிக், ஜீவன் மற்றும் ப்ரித்வி… மூவரும் ஆதியின் நண்பர்கள். ப்ரித்வி காவல்துறையில் வேலைபார்ப்பவன். ஜீவன் பல இடங்களுக்குப் பயணம் செய்பவன். அவனை ட்ராவல் என்சைக்ளோபீடியா (travel encyclopedia) என்றே ஆதி அழைப்பான்.

கௌஷிக்கிடம் பேசியவுடன், ஆதி ஜீவனை அழைத்தான். ஜீவனிடம் எங்கு செல்லலாம் என்பதை தெரிந்துகொண்ட பின், தன் அம்மாவிடம் ஊருக்குப் போவதை மெசேஜ் மட்டும் செய்தான்.

அடுத்த நாள்!

எப்பொழுதும் ஷார்ட் ட்ரிப் செல்வதற்கு எடுத்துக்கொள்ளும் எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டான்.

அவனுடைய ரக் சேக்’கில் (rucksack) அனைத்தையும், அதன் இடங்களில் பேக் செய்து ஒருவழியாகத் தேவைப்பட்ட அனைத்தையும் எடுத்துக்கொண்டு புறப்படத் தயாரானான்.

அவன் அம்மாவிற்கு போன் செய்து கிளம்புவதைத் தெரியப்படுத்திய பின், அவனுக்குத் தற்சமயம் மிகவும் தேவைப்படும் அந்த பயணத்தைத் தொடங்கினான் அவனுடைய ரேஞ் ரோவெரில்!

சில மைல் தூர பயணத்துக்குப் பின் அவன் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு வந்தடைந்தான். ஃபிரெஷ் ஆனபின், சாப்பிடச் செல்வதற்கு தயாரான ஆதி, ‘உள்ளூர் உணவை சுவைத்துப்பார்க்கலாம்’ என்று எண்ணி, மொபைலை பார்த்தபடி, அவன் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து புறப்பட்டான்.

சிறிது தூரம் சென்ற பின்… ஒரு சிக்னல்’லில் அவன் காரை நிறுத்த, கார் ஜன்னலை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஒரு பத்து முதல் பதிமூன்று வயது வரை இருக்கும் இரு சிறுமிகள்.

“அண்ணா ச்சால ஆகிளி. கொஞ்சம் ரூபா ஈவண்டி” என்று கேட்டனர். அவனுக்கு அவர்கள் பணம் கேட்கிறார்கள் என்று புரிந்தது ஆனால் என்ன சொன்னார்கள் என்று புரியவில்லை.

அவன் என்ன என்பதுபோல் சைகையில் கேட்க… அவர்கள் இருவரும் வயிற்றில் கையை தேய்த்தார்கள் பசி என்பதுபோல்.

அவர்களைப் பார்க்க பாவமாகத் தோன்றியதால், பணத்தை எடுத்துக் கொடுத்தான். கொடுத்ததை அவர்கள் வாங்கிக்கொண்டு வராத புன்னகையை வரவழைத்து… புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு சென்றனர்.

அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான் ஆதி. சிறுமியர் இருவரும் ரோட்டோரம் சென்று அவர்களைப்போல் இன்னும் சில சிறுமிகளுடன் சேர்ந்துகொண்டனர்.

சிக்னல் திறக்கப்பட்டது கூட தெரியாமல் அவர்களையே பார்த்தபடி இருந்த ஆதியை… பின்னே இருந்த வண்டிகள் தந்த ஹார்ன் சத்தம் நிகழ்வுக்குக் கொண்டுவந்தது. வண்டியைக் கிளப்பினான்.

சிறிது தூரம் சென்றவனுக்கு அந்தக் காட்சி நெருடலாகவே இருந்தது.

‘சின்னஞ்சிறு சிறுமிகள். இந்த ஊர் போல தெரியவில்லை. வேறெங்கிருந்தோ வந்திருக்கிறார்கள். ஏன் பிச்சை எடுக்க வேண்டும்?’ என்று அவனுக்கு மனதில்பட்ட அடுத்த  நொடி, அடுத்த சிக்னலில் யூ டர்ன் எடுத்து காரை திருப்பினான்.

மறு பக்க ரோட்டிலிருந்து அந்தப்பக்கமிருந்த சிறுமிகளை பார்த்தவன், அங்கு நடப்பதைப் பார்த்து சற்று பதற்றமடைந்தான்.

அந்த சிறுமிகளை யாரோ சுமோ காரில் ஏற்றிக்கொண்டு, அந்த இடத்திலிருந்து புறப்பட இருந்தனர்.

ஆதி கண்களை ஆராய விட, அந்த சுமோ’வின் ஜன்னலினுள் ஒரு நடுத்தர வயது பெண்மணி இருக்கையில் உட்கார்ந்திருக்க, முன்னே டிரைவர் ஒரு சிவப்பு நிற சட்டை அணிந்திருந்தான்.

ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த ஆதி, அவன் காரை சீக்கிரம் திருப்பிக்கொண்டு அவர்களை பின் தொடர்ந்தான்.

அவனால் காப்பற்ற முடியுமா?!

4

10 thoughts on “Ennodu Nee Unnodu naan – 2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved