என்னுள் நீ வந்தாய் – 3

என்னுள் நீ வந்தாய் – 3

கவிதா பேசப் பேச அகிலனின் முகம் மாறிப்போனது. முகத்தில் இருந்த பிரகாசம் முற்றிலும் மறைந்து இறுக்கமானது.

என்ன சொல்வதென்று தெரியாமல் சட்டென எழுந்தான். எழுந்த வேகத்தில் உட்கார்ந்திருந்த சேர் சில இன்சுகள் பின்னால் தடதடவென நகர்ந்தது.

சுற்றும் முற்றும் பார்த்துக் கோபத்தைக் கட்டுப்படுத்த, கண்களை மூடி மூச்சை முழுவதுமாக உள்ளிழுத்து விடுவித்தான்.

கவிதாவுக்கு அவனைப் பார்க்கும்போது ‘தான் சொல்லவேண்டியதை காலம் கடந்து சொல்லிவிட்டோமோ?’ என்றே தோன்றியது. கொஞ்சம் பயம் எட்டிப்பார்த்தது.

கண்கள் இரண்டும் சிவக்க, மறுபடியும் அவள் எதிரே உட்கார்ந்தவன், “Are you kidding? கல்யாணம்ங்கிறது அவளோ ஈஸியா போய்டுச்சா உனக்கு?”

“நம்ம ரெண்டு பேர் மட்டும் சம்பந்தப் பட்ட விஷயம் இல்ல இந்தக் கல்யாணம்… ரெண்டு குடும்பம் இதுல இன்வால்வ் ஆயிருக்கு. பொண்ணுப் பாக்க வந்தப்ப அவளோ சீன் போட்ட”

“ஒழுங்கா ‘நான் வேற ஒருத்தன நெனச்சுட்டு இருக்கேன்’னு சொல்லியிருந்தா உன் பக்கமே திரும்பியிருக்க மாட்டேன். பெரிய டாஷ் மாதிரி பிடிக்கலன்னு சொல்லுங்கனு… பிடிக்கலன்னு சொல்லுங்கனு மட்டும் சொன்னா என்னனு புரியும் எனக்கு” என எகிறினான்.

அவன் பேசுவதில் நியாயம் இருப்பதை உணர்ந்து “நான் அன்னைக்கே சொல்லணும்ன்னு நினச்சேன் பட் நீங்க வேற மாதிரி சொல்லி இத நிறுத்தறேன்னு சொன்னீங்க… ப்ச்… தப்பு என்மேல தான்… ஐம் ஸாரி… பட் இது நடக்கக்கூடாது” என்றவளைப் பார்த்தவன் …

“நீ என்ன சொல்றது… இனி நீயே இந்தக் கல்யாணம் நடக்கணும்னு நினைச்சாலும் நடக்காது”

“யாரையோ மனசுல நினைச்சிட்டிருக்க உன்னக் கல்யாணம் பண்ணிட்டு, நம்ம வாழ்க்கையும் நம்ம சுத்தி இருக்கவங்க வாழ்க்கையும் அழிக்க நான் விரும்பல” என்று அவளைப் பார்த்து முறைத்துக்கொண்டே போனை எடுத்தான்.

அவள் புரியாமல் பார்க்க, அவன் அழைத்தது அவள் அப்பாவை.

“சொல்லுங்க மாப்ள. நல்லா இருக்கீங்களா” என பெரியவர் நலம் விசாரிக்க “அங்கிள் என்ன மன்னிச்சுடுங்க… இந்தக் கல்யாணம் நடக்கக்கூடாது ஏன்னா…” என்று அவன் முடிக்கும்முன்…

“என்ன மாப்ள சொல்றீங்க கல்யாணம்… நடக்…காதா…” என்று பேசும்போதே அவரின் பேச்சு சரியாகக் கேட்கமால் அழைப்பு கட் ஆனது.

போன் கட் ஆனவுடன் போனையே ஒரு நொடி பார்த்தவன், எதிரே ஸ்தம்பித்து அவனையே பார்த்துக்கொண்டிருப்பவளைப் பார்த்து…

“போதுமா… உன் அப்பாகிட்ட சொல்லியாச்சு. இப்போ சந்தோஷமா? உன் மேல சந்தேகம் வராது. அதுதானே உனக்கு வேணும்? அந்த மனுஷன் எவ்ளோ கஷ்டப்பட்டு…” என்று சொல்லிமுடிக்கும் முன் அவளின் மொபைல் அடித்தது.

அழைத்தது அவள் தம்பி. அவள் எடுத்துப் பேச, எதிரிலிருப்பவன் என்ன சொன்னானோ… “என்னடா சொல்ற?” எனப் பதறினாள்.

‘என்ன ஆயிற்று’ என்று அகிலன் அவளைப் பார்க்க, அவளோ கலங்கிய கண்களை மூடிக்கொண்டு,

“சீக்கரம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போடா. நீ தைரியமா இரு ப்ளீஸ். உன்னைப்பாத்து அவரும் பதறிடப்போறாரு. நான் இப்போவே கிளம்பறேன். சித்தப்பாக்கு சொல்லிடு போன் பண்ணி”

சொல்லிவிட்டு போன் வைத்தவள் சில நொடிகள் சிலையென உட்கார்ந்திருந்தாள்.

அவளை மூன்று முறை அழைத்தவன், அவள் சலனமில்லாமல் இருப்பதைப் பார்த்து, அவள் அருகே சென்று உலுக்க, குலுங்கித் தன்னிலைக்கு வந்தாள்.

அவனை பக்கத்தில் பார்த்ததும், எதுவும் பேசாமல், வெளிறிப்போன முகத்துடன் அங்கிருந்து விறுவிறுவெனச் சென்றாள்.

அவள் போவதையே பார்த்தவன், ஏதோ அவள் வீட்டில் நடந்துள்ளது என்று யூகித்தான்.

அவள் தந்தைக்கு மறுபடியும் அழைக்க, அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

‘இங்கு என்ன நடந்தது’ என்று மீண்டும் மனதில் ஓட்டிப்பார்த்தான். ஏதோ புரிந்தவனாய் போன் எடுத்து யாரையோ அழைத்தான்.

****************

‘தம்பி முன் அழுதால் அவன் இன்னும் நொறுங்கிவிடுவான். அதுவும் நான் அழுதால் அப்பாவை இன்னும் பலவீனம் ஆக்கிவிடும். அழக்கூடாது. அழக்கூடாது’ என்று தனக்குத் தானே அறிவுரைக் கூறிக்கொண்டு அந்த மருத்துவமனையின் ICU பிரிவுக்கு அவசரமாக ஓடினாள் கவிதா.

தன்னால் தான் இந்த நிலைமை அப்பாவிற்கு என்று நினைக்கும்போது மனது ரணமானது.

வெளியே நின்று கொண்டிருந்த அவளின் தம்பி இளஞ்செழியனைப் பார்த்தவுடன் “செழியா…” என்று உரக்க அழைத்துக்கொண்டு அருகில் சென்றாள்.

அவள் கண்களில் கண்ணீர் என்ன தடுத்தும் நிற்காமல் வெளியேற, தம்பியின் சட்டையைப் பிடித்தவாறே, “என்னடா ஆச்சு அப்பாக்கு? எப்படிடா இருக்காரு? உள்ள போலாமா பாக்க?” ICU கதவைப் பார்த்துக்கொண்டே கேட்க…

“மைனர் அட்டாக்’னு டாக்டர் சொன்னாருக்கா. பயப்படும்படியா ஒன்னும் இல்லயாம். இப்போ நார்மல் ஆகிட்டாருனு சொன்னாரு” என்றான் இறுகிய முதத்துடன்.

அவ்வளவு நேரம் கனத்த மனது, கொஞ்சம் நிம்மதியாக, கசிந்த கண்களைத் துப்பட்டாவில் துடைத்துக்கொண்டு, தன்னைச் சில நொடி ஆசுவாசப் படித்துக்கொண்டாள்.

“ரொம்ப பயந்துட்டயா… நானும் பயந்துட்டேன்… ஒன்னும் ஆகாதுடா…” தம்பியைத் தேற்றினாள்.

“ஏன்டா வெளிய நிக்கற? உள்ள நாம போகக் கூடாதா?” எனக் கேட்க…

அவளைப் பார்த்து முறைத்தவன்… “எனக்கு உள்ள வரவே பிடிக்கல. நீ போய்ப் பாரு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் போகும் திசையையே பார்த்தவள், ‘அப்பாவிற்கு இப்படி இருக்கும் நிலைமையில் ஏன் தம்பி இப்படி நடந்துகொள்கிறான்’ எனப் புரியாமல் கதவை திறந்துகொண்டு உள்ளே பார்த்தக் கவிதா அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள்…

அங்கே அகிலன்!!!

———இன்று———

“கவிதா. வா மா டின்னர் ரெடி ஆயிடுச்சு… சாப்பிடலாம்” என்று தாமஸ் அவளை எழுப்பியதில் நிகழ்விற்கு வந்தாள் கவிதா.

அவளுக்கு சப்பாத்தி பரிமாற, “சூப்பரா இருக்குண்ணா… உங்க மனைவி குடுத்துவெச்சவங்க” என்று புன்னகையுடன் சொன்னவள் “எங்க இருக்காங்க… ஊர்லயா?” கேட்டாள் கவிதா.

அவர் முகம் வாடிப் போக ‘தப்பா கேட்டுட்டோமோ’ எனக் கவிதா மனதில் நினைக்கும்போது “அவ இப்போ இல்லமா” என்றார் தத்தளித்த குரலில்.

உடனே பதறிக்கொண்டு “ஐயோ அண்ணா… என்ன மன்னிச்சிடுங்க” என்றாள்.

“பரவால்ல மா” என்றவர் மறுபடியும் சமயலைக்குள் சென்றார்.

‘ச்ச யோசிச்சுப் பேசமாட்டயா கவி…? அப்பவும் இப்பவும் எப்பவும் அவசரம் உனக்கு… பாவம் ஒவ்வொருத்ததுக்கு ஒவ்வொரு வகைல கஷ்டம்…’ மனதில் நினைக்கும்போது… ஆர்ப்பாட்டத்துடன் துள்ளிக்குதித்துக்கொண்டு உள்ளே வந்தாள் லயா.

அப்போது தான் கவிதாவிற்கு, லயா சென்றவுடன் பார்த்த ஈமெயில் நியாபகம் வந்தது.

“ஹாப்பி பர்த்டே லயா. என்ன ஒரே சந்தோஷம்…? பர்த்டே ட்ரீட்டா?” கேட்டாள் கவிதா புன்னகையுடன்…

“தெரிஞ்சிடுச்சா… தேங்க் யு… Yeah. ட்ரீட் தான். என் பாய் ஃபிரண்ட்’ட இருந்து” எனக் கண்ணடித்தாள் லயா.

“சூப்பர். அப்போ சீக்கரம் இன்ட்ரோ குடுத்துரு” என்றாள் பதிலுக்கு கவிதாவும் கண்ணடித்து.

“கண்டிப்பா… AJ கிட்ட உங்கள பத்தி சொன்னேன்… புதுசா வந்துருக்கீங்கனு… I will introduce you to him” என்றவள்…

“ஓகே கவிதா கொஞ்சம் டையர்ட்’டா இருக்கு. நான் தூங்கப்போறேன். நாளைக்கி பாப்போம். பை தாமஸ் அண்ணா” என்று விடைபெற்றுக்கொண்டு அவளறைக்குப் பறந்தாள் லயா.

கவிதாவின் புருவங்கள் ஆச்சர்யத்தில் சுருங்கியது “AJ” என்ற பெயரைக் கேட்டவுடன். அவளின் கல்லூரி நாட்கள் மற்றும் அஜய் எல்லாம் கண்முன்னே வந்து வந்து சென்றது.

அமைதியாக அவளுடைய அறைக்குள் வந்த கவிதா அந்த “AJ” என்ற பெயர் சுருக்கத்தை யோசித்துக்கொண்டிருந்தாள். அஐய்யைப் பற்றி அகிலனிடம் சொன்னதெல்லாம் கண்முன்னே ஓடியது…

———அன்று———

‘அப்பாவின் உடம்பு சற்று பரவாயில்லை’ என்று சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து சென்ற தம்பியைப் புரியாமல் பார்த்த கவிதா, ICU’வுக்குள் சென்றாள்.

அங்கே உள்ளே இருந்த அகிலனைப் பார்த்து அதிர்ந்தாள்.

‘இவன் எப்படி இங்க வந்தான்?’ என்ற யோசனையுடன் தந்தையை நெருங்கினாள் ஒரு இனம் புரியாத அழுத்தத்துடன்.

தந்தையைப் பார்த்த மறு நொடி “அப்பா…” என்று அவள் கட்டுப்பாட்டை மீறி கண்கள் கலங்கின. அவரோ ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தார் மருந்தின் தாக்கத்தால்.

“கவிகண்ணு அழாதடா. அண்ணாக்கு ஒன்னும் ஆகாது. மாப்ள எனக்கு போன் பண்ணி விவரம் கேட்டுட்டு இப்போ தான் வந்தாரு.

உனக்கும் அவருக்கும் ஏதாச்சும் பிரச்சனையா?” என்று அவள் சித்தப்பா அகிலனையும் கவிதாவும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே கேட்க, அகிலன் கொலைவெறியில் அவளைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தான்.

‘என்ன நடந்தது’ என்று தெரியாதவர், அவளிடம் “அப்பா எந்திரிக்க நேரம் ஆகும். நீங்க ரெண்டு பேரும் போய்ச் சாப்பிட்டு நல்லப்படியா பேசிட்டி வாங்க.

சின்ன விஷயத்தைப் பேசி சரி பண்ணிக்கோங்க” என்று அறிவுரைகளைக் கொடுக்க, கவிதா ‘என்ன செய்வது’ என்று புரியாமல் நின்று கொண்டிருந்தாள். அவரைப் பார்த்துச் செயற்கையாக அகிலன் புன்னகைத்து…

அவள் அருகில் வந்தவன் “வா… உன்கிட்ட பேசணும்” எனச் சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் முன்னேறி வெளியே செல்ல… சித்தப்பாவிடம் கண்ணசைவில் சொல்லிவிட்டு அவளும் அவனைப் பின்தொடர்ந்தாள்.

“இது தான் உன்னோட ஆசையா? உன் பேச்ச கேட்டுட்டு நானும் அவசரப்பட்டுட்டேன். என்னால அந்த மனுஷன் எப்படி ஆயிட்டாரு… பாத்தல்ல” அங்கிருந்த உணவகத்தில் அமர்ந்தபடி அகிலன் கத்த,

“உங்களால இல்ல… என்னால… என்னால இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கவே முடியாது. தயவு செஞ்சு புரிஞ்சிக்கோங்க” கவிதா ஆரம்பிக்கும் முன்…

“லவ் ஆம் லவ். கொலை வெறில இருக்கேன். ஹாஸ்பிடல்ன்னு பாக்கறேன். ஏதாச்சும் பேசின…” பற்களைக் கடித்துக்கொண்டு எகிறினான் அவளிடம்.

“மனசு முழுசா அஜய் இருக்கும்போது எப்படி என்னால வேற வாழ்க்கையை வாழ முடியும்? ஒன்னு இல்ல ரெண்டு இல்ல ஆறு வருஷத்துக்கு மேல லவ் பண்ணிருக்கேன்” என்று அவள் கண்கள் கலங்க… அதைப் பார்த்தவன் மனம் அவள் மேல் கோபமிருந்தாலும் இளகியது.

“நான் என்னோட வாழ்க்கையை முழுசா ஹாஸ்டல்ல தான் வாழ்ந்தேன். வாழ்ந்துட்டு இருக்கேன். அம்மா போனதுக்கப்பறம், அப்பாவால என்ன பத்திரமா பாத்துக்க முடியுமான்னு யோசிச்சுட்டு, நான் ஃபோர்த் (Fourth) படிக்கிறப்ப ஹாஸ்டல்ல சேத்துட்டாங்க.

வருஷம் ஒரு தடவ தான் வீட்டுக்கு வருவேன். ஆனா அப்பவும் அப்பா காலேஜ் போயிடுவார். தம்பி சின்னப் பையன்… ஒரு ஃபேமிலி செட்அப்ல (family setup) இல்லாம வளர்ந்தேன். ஸ்கூல் ஹாஸ்டல்ல உயிருக்கு உயிரா இருந்த ஃபிரண்ட்’டும் போய்ட்டா.

காலேஜ்ல சேர்ந்த புதுசு… அப்போ தான் அஜய் பழக்கம். என் தனிமைக்கு ஒரு வடிகாலா இருந்தான்”

கட்டுக்கடங்காமல் அவள் கண்களில் கண்ணீர் கொட்டியது. முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் சுற்றுப்புறத்தைப் பற்றி யோசிக்காமல்.

அவன் என்ன செய்வது எனத் தடுமாறினான். அவள் அவனை தான் பயணித்த காதல் பயணத்திற்குக் கூட்டிச்சென்றாள்.

********

அங்கிருந்த பெரிய மரத்தடியில் சில மாணவர்கள் பைக் மேல் உட்கார்ந்தும், சிலர் மரத்தடியில் உட்கார்ந்தும் பேசிக்கொண்டிருக்க… அதிலிருந்த ஒருவன் “டேய் இன்னிக்கி லேட்டரல் என்ட்ரிஸ்’லாம் (laternal entry) சேர்றாங்கள்ல?” கேட்டான் மற்றொரு மாணவனிடம்.

பத்தாம் வகுப்பு முடித்ததும், பதினொன்றாம் வகுப்பில் சேராமல், பாலி டெக்னீக் காலேஜில் சேர்ந்து டிப்ளோமா படிப்பவர்கள், அது முடித்த பின், என்ஜினியரிங் கல்லூரியில் நேராக இரண்டாம் வருடம் சேர்வார்கள். அவர்களை லேட்டரல் என்ட்ரி என்று அழைப்பார்கள்.

அந்தக் கூட்டத்தில் மற்றொருவன் “ஆமா மச்சா. இன்னிக்கி தான். ஒரு வழி பண்ணிடலாம். அதுவும் அந்த ECE டிபார்ட்மென்ட் ஸ்டுடென்ட்ஸ்’ஸ விடவேக்கூடாது”

இந்த வானரக்கூட்டம் ஸாரி மாணவக்கூட்டம் IT டிபார்ட்மென்ட் மூன்றாவது வருடம் படிப்பவர்கள். இவர்களுக்கும் ECE டிபார்ட்மெண்டுக்கும் ஆகாது. ஆகவே இந்தத் திட்டம்.

சற்று தூரத்தில் அப்பாவிற்கு பை (bye) சொல்லிவிட்டு வந்துகொண்டிருந்தாள் கவிதா. அழகாக… ஸ்கை ப்ளூ சுடிதார் மற்றும் வெள்ளை துப்பட்டாவை இருபக்கமும் போட்டவாறு, மெதுவாகச் சுற்றியும் முற்றியும் பார்த்துக்கொண்டே வந்தாள்.

புதிதாக ஒரு பெண் வருகிறாள் என்பதைப் பார்த்த இந்தக் கூட்டம், அவள் அவர்களைக் கடக்கும்போது… முன் பேசிக்கொண்டிருந்தவன் “ஏய்… என்ன… போயிட்டே இருக்க… நில்லு… இங்க வா”

“எந்த டிபார்ட்மென்ட்?” கேட்டான் கவிதாவிடம்.

“ECE. லேட்டரல் என்ட்ரி” என்றாள். அவர்கள் நினைத்ததுபோல் அவள் சிக்க, அவர்களுக்குள் கண்ணசைத்துக்கொண்டவர்கள்…

“சீனியர்ஸ் இருக்கோம் நீ பாட்டுக்கு போயிட்டே இருக்க…” என்று ஒருவன் ஏதோ சொல்ல வரும்முன், அவர்களை மேலும் கீழும் பார்த்த கவிதா…

“ஓ ராக்கிங்கா… ஸப்பா…” பையை ஒரு பைக் மேல் வைத்துவிட்டு, துப்பட்டாவை கழுத்தில் சுத்திக்கொண்டு, அவர்கள் பக்கத்தில் இருந்த இன்னொரு பைக்மேல் எகிறி உட்கார்ந்தாள்.

இவளின் நடவடிக்கையைப் பார்த்தவர்கள் சில நொடிகள் வாயடைத்துப்போய் நிற்க, சட்டெனச் சுதாரித்துக்கொண்டு “ஏய் என்ன… சீனியர்ஸ் நாங்க இருக்கோம்…” என்று பேசத்தொடங்கும் முன்

“என்ன என்ன… என்ன சொல்ல வந்தீங்க” என்று காதைக் கொடுத்து கவனிப்பதுபோல், தலையைக் குனிந்துக் கேட்க “டேய்… யார்ரா இவ…” கடுப்பானான் மற்றொருவன்…

“என்ன பத்தி அவர்கிட்ட கேட்டா… அவருக்கென்ன தெரியும் பாஸ். என்கிட்ட கேளுங்க” என்றவள்

“தேர்ட் இயர் IT அஜய் தெரியுமா…? காலேஜ் ஜாயிண்ட் செகரட்ரி… நான் அவனோட ஃபிரண்ட். க்ளோஸ் ஃபிரண்ட் யு நோ” என்றாள் மிகவும் சகஜமாகத் தோள்களைக் குலுக்கி.

அதேநேரம் அங்கிருந்த அனைவரும் சந்தேகத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, அதுவரை சீனில் இல்லாத ஒருவன் அப்போது பின்னே இருந்து… “அப்படியா…? அஜயோட ஃபிரண்ட்’டா இல்ல கேர்ள் ஃபிரண்ட்’டா?” கேட்டபடி முன்னே வந்தான்.

பைக்கில் இருந்து குதித்துப் பையை மாட்டிக்கொண்ட கவிதா, கேள்வி கேட்டவனிடம் “அட என்னப்பா நீ… இத போய் என்கிட்ட கேட்டுட்டு. அவன்கிட்டயே போய்க் கேளு” என நிறுத்தி “வர்ட்டா” என்று அவனைப் பார்த்து வாய் அகலப் புன்னகைத்துவிட்டுச் சென்றாள்.

போகும் அவளையே இவன் ஒருவிதமாகப் பார்த்திருக்க… அவளோ அவசரமாக போனை எடுத்து யாரிடமோ பேசிக்கொண்டே சென்றாள். கூட்டத்தில் நடுநிலையாக நின்றுகொண்டிருந்தவனை ஏகத்துக்கு அனைவரும் முறைத்தனர்.

“யாருடா அவ…? உன் ஃபிரண்ட்’னு சொல்றா… அதுவும் க்ளோஸாமே” ஒருவன் சீற,

நெற்றியை தேய்த்து யோசித்தவன், “மச்சி நீயே பாத்தல்ல. நான் தான் அஜய்’ன்னு தெரியாம என்கிட்டயே… அஜய்கிட்ட கேட்டுகோன்னு சொல்றா… செம்ம fraud’டா இருப்பா போலயே” எனச் சொல்லும்போது அவன் மொபைல் அடித்தது.

“சொல்லு அனி…… என்ன உன் ஃபிரண்ட்’டா?…… அதுக்குன்னு…… போய்த் தொல…… ஹ்ம்ம்…” போனை வைத்தான்.

அஜய் அங்கிருந்தவர்களிடம், “மச்சி அவ அனி ஃபிரண்ட்டு டா. இப்போ தான் போன் பண்ணி சொன்னா… ரெண்டு பேரும் டிப்ளமோ க்ளாஸ்மேட்ஸாம் (classmates)”

அதற்கு அவன் நண்பன்… “டேய் உன் தங்கச்சி ஃபிரண்ட் ஓகே. அதுக்காக உன் ஃபிரண்ட்’ன்னு சொல்வாளா அவ.” என்றான் கடுப்புடன். “அதுவும் க்ளோஸ்” ஒத்து ஊதினான் இன்னொருவன்.

“விடு டா. உங்களப் பாத்து பயந்துருப்பா… அதுனால சொல்லிருப்பா” என சமாளித்தான் அஜய். பாசமான தங்கையின் சிபாரிசாயிற்றே.

“டேய் மனசாட்சியைத் தொட்டு சொல்லு. அவ… எங்களைப் பார்த்து பயந்தா?” ஒருவன் கேட்க…

“அட… விடுங்கடா. இன்னும் சின்னப் பசங்க மாதிரி ராக்கிங்’லாம் பண்ணிக்கிட்டு. அந்த ECE கேங்குக்கு தான் அறிவில்ல உங்களுக்குமா? நான் ப்ராக்டிஸ் போறேன். நாளைக்கி இன்டெர் காலேஜ் மேட்ச் இருக்கு” என்று அவர்களைக் கலைத்துவிட்டுச் சென்றான் அஜய்.

********

அடுத்தநாள் கல்லூரி வந்த கவிதா ‘ச்ச இந்த அஜய்ய இன்னைக்குப் பாத்தே ஆகணும். அந்த சீனியர்ஸ் பாக்கறப்பெல்லாம் லுக் விட்டே படுத்தறாங்க’ என்று யோசித்துக்கொண்டு வகுப்புக்குள் நுழைய…

“கவிதா வா வா. இன்னிக்கி க்ளாஸ் இல்ல. இன்டெர் காலேஜ் பாக்ஸிங் மேட்ச். அதுவும் காலேஜ் சாம்பியன் அஜய்யோட மேட்ச்” என்று அவளைக் கூட்டிக்கொண்டு சென்றாள் அவளுடன் படிப்பவள்.

‘என்ன அஜய் மேட்ச்சா? ஒருவேளை அவனோ…? சூப்பர். அவனாயிருந்தா இன்னிக்கி பார்த்துப் பேசிடவேண்டியதுதான்’ என்று யோசித்துக்கொண்டு ஸ்டேடியம்முள் நுழைய, அரங்கமே “AJ”…”AJ” என்று கத்திக்கொண்டிருந்தது.

அங்கே சண்டையிட்டுக்கொண்டிருந்தவனைப் பார்த்த கவிதா அதிர்ந்தாள்.

நேற்று அவள் சீனியர்ஸிடம் பேசியது, அஜயிடமே அஜய் பற்றிப் பேசியது நினைவிற்கு வர, இன்னமும் அதிர்ந்தாள்.

18
1
4

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved